Sunday, January 23, 2011

welcome

வணக்கம்
புதியதோர் உலகம் செய்வோம்
விதியினை வெல்வோம்- நல்ல
மதியின் பயனை யாவர்க்கும் சொல்வோம்
சிந்தனைகள் பகிர்ந்து கொள்வோம்
வித்தைகள் கற்போம்
விளையாடி மகிழ்வோம்
Face book கிற்குப்பதிலாக
புதியதோர் உலகத்திற்கு
தினமும் வாரீர் !!
E - Mail  ற்கு பதிலாக
புதியதோர் உலகத்தில்  உங்கள் எண்ணங்களைப்
பகிர்ந்து கொள்வீர் !!
இது உங்கள் பக்கம்
இது உங்கள் உலகம்
இது உங்கள் வீடு
இதற்கு விண்ணும் எல்லையில்லை
மண்ணும் எல்லையில்லை
இதில் வரப்போகும் எண்ணங்களோ
கடலை விட ஆழமும் , மலையின் சிகரத்தை விட  உயரமும் கொண்டவை
இது ஒரு நூறு பேர்களின் சிற்பக்கூடம்
சிந்தனைச் சிற்பிகளே  வாரீர்
உங்கள் சிந்தனை முத்துக்கள் இங்கே மாலையாகத் தொடுக்கப்படும்
இந்த உலகம் என் இனிய நண்பர்கள் கூடப்போகும் கச்சேரிக்கூடம்
இது ஒரு நூறு மலர்த் தோட்டத்தின் பூக்கூடை
உங்கள் எண்ணங்கள்  இங்கே புதிது புதிதாகப் பூத்துக் குலுங்கட்டும்
இந்த உலகம் ஒரு தடையற்ற நீரோடை
 உங்கள் எண்ணங்கள்  இங்கே வற்றாத ஊற்றாகட்டும்;
இது ஒரு தேன் கூடு ;
தேனீக்களே, தேனை விடவும் சுவையானது உங்கள் எண்ணங்கள் என்பதை
புதியதோர் உலகத்திலே சத்தியமாக்குங்கள்
வாருங்கள்!!  வாருங்கள் !! உங்களை மனம் திறந்து வரவேற்கிறேன்
இந்த இணையதளத்தின் வலைப்பூவை
உங்களுக்குச் சமர்ப்பிக்கும் 
அன்பன்
இராமநாதன்


No comments:

Post a Comment