சம்பந்தியும் , குரங்கும் - வாரியார்
நம்ம ஊரில் மணமக்களின் பெற்றோர்களை சம்பந்தி என்று சொல்வோம்.
ஆனால் இன்று அதுவும் மருவி
சம்மந்தி என்று ஆகிவிட்டது.
உண்மையில் சம்பந்தி என்றால் சம்- நல்ல , பந்தி: உறவு.
நம் வீட்டிற்கு சம்பந்தி வந்திருக்கிறார் என்றால் நல்ல உறவினர் வந்திருக்கிறார் என்பது பொருள்.
ஆனால் இன்று யாரும் சம்பந்தி என்று அழைப்பதில்லை.
சம்மந்தி என்றே அழைக்கிறோம்.
அம்மா சம்மந்தி வந்திருக்கிறார் தண்ணி கொடுங்க
அம்மா சம்மந்தி வந்திருக்கிறார் சப்பாடு போடுங்க
அம்மா சம்மந்தி சாப்பிட்டு முடிச்சுட்டார் தாம்பூலம் கொடுங்க
என்று வார்த்தைக்கு வார்த்தை சம்மந்தி என்றே சொல்கிறார்கள்.
ஆனால் சம்மந்தி என்ற வார்த்தைக்கு என்ன பொருள்
சம் என்றால் நல்ல. மந்தி என்றால் குரங்கு..
அம்மா நல்ல குரங்கு வந்திருக்கிறார் தண்ணி கொடுங்க
அம்மா நல்ல குரங்கு வந்திருக்கிறார் சாப்பாடு போடுங்க
அம்மா நல்ல குரங்குக்கு தாம்பூலம் கொடுங்க
என்று வார்த்தைக்கு வார்த்தை குரங்கு என்று சொல்கிறோம்.
ஆனால் அவர் அதையும் பொருட்படுத்தாமல் சாப்பிட்டுவிட்டு சொல்கிறார்.
எனவே தமிழில் உச்சரிப்பை மாற்றக்கூடாது.
அவ்வையும் தமிழும் என்ற தலைப்பில் வாரியார் பேசியது
========================================================
ஆனால் இன்று அதுவும் மருவி
சம்மந்தி என்று ஆகிவிட்டது.
உண்மையில் சம்பந்தி என்றால் சம்- நல்ல , பந்தி: உறவு.
நம் வீட்டிற்கு சம்பந்தி வந்திருக்கிறார் என்றால் நல்ல உறவினர் வந்திருக்கிறார் என்பது பொருள்.
ஆனால் இன்று யாரும் சம்பந்தி என்று அழைப்பதில்லை.
சம்மந்தி என்றே அழைக்கிறோம்.
அம்மா சம்மந்தி வந்திருக்கிறார் தண்ணி கொடுங்க
அம்மா சம்மந்தி வந்திருக்கிறார் சப்பாடு போடுங்க
அம்மா சம்மந்தி சாப்பிட்டு முடிச்சுட்டார் தாம்பூலம் கொடுங்க
என்று வார்த்தைக்கு வார்த்தை சம்மந்தி என்றே சொல்கிறார்கள்.
ஆனால் சம்மந்தி என்ற வார்த்தைக்கு என்ன பொருள்
சம் என்றால் நல்ல. மந்தி என்றால் குரங்கு..
அம்மா நல்ல குரங்கு வந்திருக்கிறார் தண்ணி கொடுங்க
அம்மா நல்ல குரங்கு வந்திருக்கிறார் சாப்பாடு போடுங்க
அம்மா நல்ல குரங்குக்கு தாம்பூலம் கொடுங்க
என்று வார்த்தைக்கு வார்த்தை குரங்கு என்று சொல்கிறோம்.
ஆனால் அவர் அதையும் பொருட்படுத்தாமல் சாப்பிட்டுவிட்டு சொல்கிறார்.
எனவே தமிழில் உச்சரிப்பை மாற்றக்கூடாது.
அவ்வையும் தமிழும் என்ற தலைப்பில் வாரியார் பேசியது
========================================================
வாரியாரின் நகைச்சுவை
வாரியார் சுவாமிகள், ஒரு கோயிலில் திருவிளையாடல் புராணம் சொற்பொழிவு வழங்கிக் கொண்டு இருந்தார்.
வாரியார் சுவாமியின் சொற்பொழிவு கேட்பவர்கள் மிகக் கவனமாக கேட்பார்கள். ஏனெனில், அரங்கத்தில் அமர்ந்திருப்பவர்களிடம் திடீரென்று கேள்விகள் கேட்பார். எனவே, முன்வரிசையில் அமர்பவர்கள் மிக்க கவனத்துடன் இருப்பார்கள்.
சிவபெருமானின் பெருமைகளைச் சொன்னபடி இருந்த கிருபானந்தவாரியார் திடீரென்று ஒரு சிறுவனை எழுப்பி "தம்பி! தருமிக்கு பாட்டு எழுதிக் கொடுத்தது யாரு?" என்று கேட்டார்.
அப்போது திருவிளையாடல் படம் வெளிவந்திருந்த சமயம்.
அந்த பையன் சட்டென்று எழுந்து "சிவாஜி" என்றான்.
அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
வாரியார் அனைவரையும் நோக்கி "ஏன் சிரிக்கிறீங்க? அந்தப் பையன் சரியாத்தான் சொல்லியிருக்கான்"
"நீங்க நேருவை நேருஜி -ன்னு சொல்றீங்க, காந்தியை காந்திஜி -ன்னு சொல்றீங்க, அதைப் போல்தான் இந்தப் பையன் சிவாவை சிவாஜி-ன்னு சொன்னான், வடக்கே ஒருத்தரை உயர்வா மரியாதையாய் அழைக்க 'ஜி' சேர்ப்பது வழக்கம் , அந்த அர்த்தத்தில் சிவாஜின்னு சொல்லி இருக்கான் " என்றாரே பார்க்கலாம்.
கூட்டம் வாரியாரின் நகைச்சுவைத் திறமை கண்டு வழக்கம் போல் அதிசயித்து நின்றது.
வாரியார் சுவாமியின் சொற்பொழிவு கேட்பவர்கள் மிகக் கவனமாக கேட்பார்கள். ஏனெனில், அரங்கத்தில் அமர்ந்திருப்பவர்களிடம் திடீரென்று கேள்விகள் கேட்பார். எனவே, முன்வரிசையில் அமர்பவர்கள் மிக்க கவனத்துடன் இருப்பார்கள்.
சிவபெருமானின் பெருமைகளைச் சொன்னபடி இருந்த கிருபானந்தவாரியார் திடீரென்று ஒரு சிறுவனை எழுப்பி "தம்பி! தருமிக்கு பாட்டு எழுதிக் கொடுத்தது யாரு?" என்று கேட்டார்.
அப்போது திருவிளையாடல் படம் வெளிவந்திருந்த சமயம்.
அந்த பையன் சட்டென்று எழுந்து "சிவாஜி" என்றான்.
அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
வாரியார் அனைவரையும் நோக்கி "ஏன் சிரிக்கிறீங்க? அந்தப் பையன் சரியாத்தான் சொல்லியிருக்கான்"
"நீங்க நேருவை நேருஜி -ன்னு சொல்றீங்க, காந்தியை காந்திஜி -ன்னு சொல்றீங்க, அதைப் போல்தான் இந்தப் பையன் சிவாவை சிவாஜி-ன்னு சொன்னான், வடக்கே ஒருத்தரை உயர்வா மரியாதையாய் அழைக்க 'ஜி' சேர்ப்பது வழக்கம் , அந்த அர்த்தத்தில் சிவாஜின்னு சொல்லி இருக்கான் " என்றாரே பார்க்கலாம்.
கூட்டம் வாரியாரின் நகைச்சுவைத் திறமை கண்டு வழக்கம் போல் அதிசயித்து நின்றது.
======================================================
மூடனும் கற்பக மரமும்
ஒரு அறிவில்லாத மூடன்... அறிவுக்கும் அவனுக்கும் 50 மைல் எடவெளி... இப்புடீ நடந்து போறான்... வயிறு முதுவுல ஒட்டிங்குது...
தண்ணீர் விடாய் (தாகம்)... கால் போன வழியாப் போறான்... பகல் 12 மணி... கற்பகமரம் எதிருல வருது... இந்த மூடனுக்கு கற்பக மரம்னு தெரியாது.
தேன் குளிர்ச்சி... ஜிலுஜிலுஜிலுன்னு காத்து... ரெண்டு நிமிடம் ஒக்காந்தான்.
"கொஞ்சம் தண்ணியிருந்தா தேவலை"ன்னான்.
கற்பக மரமோல்லோ? தங்க டம்ளர்ல ஐஸ் வாட்டர்... தகர டம்ளர்லயா குடுக்கும்?
கொஞ்சம் தண்ணீர் பருகினான், "சாப்ட்டு தண்ணி குடிச்சா தேவலை"ன்னான்.
இவ்வளவு பெரிய வாழையிலை... டபுள் வரிசையா காய்கறி, சீரகச் சம்பா பச்சரிசி அன்னம், பருப்பு, அப்ப உருக்குன நெய், மிளகு தக்காளி வத்தக் கொழம்பு, ஆப்பிள் மோர், மோர்க்கொழம்பு, அன்னாசிப்பழம் ரசம், விளாம்பழம் பச்சிடி, ஆரஞ்சு கிச்சடி, பாதாம் கீரு, கட்டித் தயிரு, நெல்லிக்கா ஊருகா,
ஒரு புடி புடிச்சான். அதிகமா உண்டா என்ன தோனும்? "கொஞ்சம் படுத்தா தேவலை... பாயிருந்தா தேவலை"ன்னான்.
பத்தமடை பட்டுப் பாய், வெல்வெட்டு தலகாணி, படுக்க வேண்டியது தானே? மடையன். "கீழ படுத்தா ஓனான் வருமே... அரணை வருமே... கட்டில் இருந்தா தேவலை"ன்னான்.
3 அடி அகலம் 6 அடி நீளம் கட்டில் ஏறிப் படுத்தான். தூங்கவேண்டியது தானே? "கட்டில் அகலமா இல்லையே ஒருவேளை உருண்டு விழுந்துடுவமோ பெரிய கட்டில் இருந்தா தேவலை"...
6 அடி அகலம் 8 அடி நீளம் கட்டில். தூங்கவேண்டியது தானே? "இவ்வளவு பெரிய கட்டில்ல ஒத்தையா படுக்கறமே"ன்னு நெனச்சான்.
ஒரு 19 வயது இளம் பெண் நைலான் புடவ கட்டினு ரெட்டைப் பின்னல் போட்டு இந்த முடி மயிர வெட்டி அப்படி வளச்சினு ஜிலுஜிலுஜிலுன்னு...
"அம்மா, பராசக்தி, நீங்க யாரம்மா"ன்னு வணங்கலாம்...
"இது பூதமோ"ன்னு நெனச்சான் பூதமாப் போச்சு,
"விழுங்கிடுமோ"ன்னு நெனச்சான் விழுங்கிடுச்சி!
கற்பக மரம் வந்தும் அவனுக்கு இடர்...
மூடனுக்கு என்ன வந்தாலும் அவன் முன்னுக்கு வரமாட்டான்.
=====================================================
கஞ்சவியாபாரி
முன்னொரு காலத்தில் பணக்கார துணி வியாபாரி ஒருவன் இருந்தான், பணக்காரனாக இருந்தாலும் படும் கஞ்சன். அவனிடம் வேலை செய்தவர்கள் அனைவரும் படும் முட்டாள்கள். எங்கே புத்திசாலிகளை வேலைக்கு வைத்தால் அதிக சம்பளம் கொடுக்கணும் என்றும், தன்னிடமே படித்து எங்கே தனக்கு போட்டியாக வியாபாரம் தொடங்கிடுவாங்கன்னு நினைத்தான்.
ஒரு நாள் வழக்கம் விற்பனைக்காக வெளியூர் செல்ல முடிவு செய்தான். விலை உயர்ந்த துணிகளை எல்லாம் நான்கைந்து பெட்டிகளுக்குள் வைத்து மூடினான். எல்லாப் பெட்டிகளையும் ஒரு ஒட்டகத்தின் முதுகில் ஏற்றிவிட்டு மிகக்குறைந்த கூலிக்கு அமர்த்திய முட்டாள் வேலைக்காரர்கள் இருவருடன் புறப்பட்டான்.
அளவுக்கு அதிகமாக பொருட்களை ஏற்றியதால் வழியில் பாரம் தாங்காமல் ஒட்டகம் கீழே விழுந்து விட்டது.
வேலைக்காரர்களைப் பார்த்து அவன், ""நீங்கள் இங்கேயே ஒட்டகத்தைப் பார்த்துக் கொண்டிருங்கள். நான் பக்கத்தில் இருக்கும் ஊருக்குச் சென்று இன்னொரு ஒட்டகம் கொண்டு வருகிறேன். பிறகு சுமையை இரண்டு ஒட்டகத்திலும் சமமாக வைத்துப் பயணத்தைத் தொடரலாம். நான் இல்லாத போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நான் வருவதற்குள் மழை வந்துவிட்டால் பெட்டிகளை எப்படியாவது நனையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்,'' என்று சொல்லிவிட்டுச் சென்றான்.
வேலைக்காரர்கள் இருவரும் சரியான முட்டாள்கள். இது தெரிந்தும் குறைந்த கூலி கொடுத்து அவர்களை விலை பேசியிருந்தான் வணிகன். எல்லாரும் எவ்வளவோ சொன்னார்கள். ஆனால், வியாபாரியோ வழித்துணைக்குதானே இவர்களை அழைத்துச் செல்கிறேன். எடுபடி வேலை செய்யணும். இதனால் எனக்கு ஒரு பாதிப்பும் வராது என்று நினைத்தான்.
சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது.
"நம் முதலாளி பெட்டிகளை நனையாமல் பார்த்துக் கொள்ளச் சொன்னார். இப்பொழுது என்ன செய்வது?'' என்று கேட்டான் ஒருவன்.
"பெட்டிகளுக்கு உள்ளே இருக்கின்ற துணிகளை எல்லாம் எடுத்துப் பெட்டிகள் மேலே போட்டு மூடுவோம். பெட்டிகள் நனையாமல் பார்த்துக் கொள்வோம்,'' என்றான் அடுத்தவன்.
இருவரும் பெட்டிகளுக்குள் இருந்த விலையுயர்ந்த துணிகளை எல்லாம் எடுத்துப் பெட்டிகளுக்கு மேல் போட்டனர்.
மழையில் நனைந்து துணிகள் எல்லாம் ஈரமாகிவிட்டன.
ஒட்டகத்துடன் திரும்பிய வணிகன், ""ஐயோ! என்னடா செய்தீர்கள்? துணிகள் எல்லாம் நனைந்து வீணாகிவிட்டதே,'' என்று கோபத்துடன் கத்தினான்.
"முதலாளி நீங்க சொன்னபடி பெட்டிகள் நனையாமல் இருப்பதற்காகத் துணிகளை எல்லாம் அதன் மேலே போட்டோம். அந்தப் பெட்டிகள் சிறிது கூட நனையவில்லை. நீங்களே பாருங்கள்,'' என்றான் அவர்களில் ஒருவன்.
"முட்டாள்களான உங்களுக்கு இனி என்னிடம் வேலை இல்லை,'' என்று அவர்களை விரட்டினான் வணிகன்.
கொஞ்சம் காசுக்கு சிக்கனம் பார்க்கப் போய் முதலுக்கே நஷ்டம் வந்ததை எண்ணி வேதனையுடன் ஊர் திரும்பினான் வணிகன்.
============================================
Tiger in the toilet
காட்டுக்குள் இருந்து வழி தவறி வந்த அந்தப் புலி, எப்படியோ அந்த பன்னாட்டு நிறுவனத்தின் ரெஸ்ட் ரூமுக்குள் நுழைந்துவிட்டது.
அடுத்த நாள், நிறுவனத்தின் வைஸ் பிரசிடென்ட்டை ஏப்பம்விட்டார் புலியார்.
மூடனும் கற்பக மரமும்
ஒரு அறிவில்லாத மூடன்... அறிவுக்கும் அவனுக்கும் 50 மைல் எடவெளி... இப்புடீ நடந்து போறான்... வயிறு முதுவுல ஒட்டிங்குது...
தண்ணீர் விடாய் (தாகம்)... கால் போன வழியாப் போறான்... பகல் 12 மணி... கற்பகமரம் எதிருல வருது... இந்த மூடனுக்கு கற்பக மரம்னு தெரியாது.
தேன் குளிர்ச்சி... ஜிலுஜிலுஜிலுன்னு காத்து... ரெண்டு நிமிடம் ஒக்காந்தான்.
"கொஞ்சம் தண்ணியிருந்தா தேவலை"ன்னான்.
கற்பக மரமோல்லோ? தங்க டம்ளர்ல ஐஸ் வாட்டர்... தகர டம்ளர்லயா குடுக்கும்?
கொஞ்சம் தண்ணீர் பருகினான், "சாப்ட்டு தண்ணி குடிச்சா தேவலை"ன்னான்.
இவ்வளவு பெரிய வாழையிலை... டபுள் வரிசையா காய்கறி, சீரகச் சம்பா பச்சரிசி அன்னம், பருப்பு, அப்ப உருக்குன நெய், மிளகு தக்காளி வத்தக் கொழம்பு, ஆப்பிள் மோர், மோர்க்கொழம்பு, அன்னாசிப்பழம் ரசம், விளாம்பழம் பச்சிடி, ஆரஞ்சு கிச்சடி, பாதாம் கீரு, கட்டித் தயிரு, நெல்லிக்கா ஊருகா,
ஒரு புடி புடிச்சான். அதிகமா உண்டா என்ன தோனும்? "கொஞ்சம் படுத்தா தேவலை... பாயிருந்தா தேவலை"ன்னான்.
பத்தமடை பட்டுப் பாய், வெல்வெட்டு தலகாணி, படுக்க வேண்டியது தானே? மடையன். "கீழ படுத்தா ஓனான் வருமே... அரணை வருமே... கட்டில் இருந்தா தேவலை"ன்னான்.
3 அடி அகலம் 6 அடி நீளம் கட்டில் ஏறிப் படுத்தான். தூங்கவேண்டியது தானே? "கட்டில் அகலமா இல்லையே ஒருவேளை உருண்டு விழுந்துடுவமோ பெரிய கட்டில் இருந்தா தேவலை"...
6 அடி அகலம் 8 அடி நீளம் கட்டில். தூங்கவேண்டியது தானே? "இவ்வளவு பெரிய கட்டில்ல ஒத்தையா படுக்கறமே"ன்னு நெனச்சான்.
ஒரு 19 வயது இளம் பெண் நைலான் புடவ கட்டினு ரெட்டைப் பின்னல் போட்டு இந்த முடி மயிர வெட்டி அப்படி வளச்சினு ஜிலுஜிலுஜிலுன்னு...
"அம்மா, பராசக்தி, நீங்க யாரம்மா"ன்னு வணங்கலாம்...
"இது பூதமோ"ன்னு நெனச்சான் பூதமாப் போச்சு,
"விழுங்கிடுமோ"ன்னு நெனச்சான் விழுங்கிடுச்சி!
கற்பக மரம் வந்தும் அவனுக்கு இடர்...
மூடனுக்கு என்ன வந்தாலும் அவன் முன்னுக்கு வரமாட்டான்.
=====================================================
கஞ்சவியாபாரி
முன்னொரு காலத்தில் பணக்கார துணி வியாபாரி ஒருவன் இருந்தான், பணக்காரனாக இருந்தாலும் படும் கஞ்சன். அவனிடம் வேலை செய்தவர்கள் அனைவரும் படும் முட்டாள்கள். எங்கே புத்திசாலிகளை வேலைக்கு வைத்தால் அதிக சம்பளம் கொடுக்கணும் என்றும், தன்னிடமே படித்து எங்கே தனக்கு போட்டியாக வியாபாரம் தொடங்கிடுவாங்கன்னு நினைத்தான்.
ஒரு நாள் வழக்கம் விற்பனைக்காக வெளியூர் செல்ல முடிவு செய்தான். விலை உயர்ந்த துணிகளை எல்லாம் நான்கைந்து பெட்டிகளுக்குள் வைத்து மூடினான். எல்லாப் பெட்டிகளையும் ஒரு ஒட்டகத்தின் முதுகில் ஏற்றிவிட்டு மிகக்குறைந்த கூலிக்கு அமர்த்திய முட்டாள் வேலைக்காரர்கள் இருவருடன் புறப்பட்டான்.
அளவுக்கு அதிகமாக பொருட்களை ஏற்றியதால் வழியில் பாரம் தாங்காமல் ஒட்டகம் கீழே விழுந்து விட்டது.
வேலைக்காரர்களைப் பார்த்து அவன், ""நீங்கள் இங்கேயே ஒட்டகத்தைப் பார்த்துக் கொண்டிருங்கள். நான் பக்கத்தில் இருக்கும் ஊருக்குச் சென்று இன்னொரு ஒட்டகம் கொண்டு வருகிறேன். பிறகு சுமையை இரண்டு ஒட்டகத்திலும் சமமாக வைத்துப் பயணத்தைத் தொடரலாம். நான் இல்லாத போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நான் வருவதற்குள் மழை வந்துவிட்டால் பெட்டிகளை எப்படியாவது நனையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்,'' என்று சொல்லிவிட்டுச் சென்றான்.
வேலைக்காரர்கள் இருவரும் சரியான முட்டாள்கள். இது தெரிந்தும் குறைந்த கூலி கொடுத்து அவர்களை விலை பேசியிருந்தான் வணிகன். எல்லாரும் எவ்வளவோ சொன்னார்கள். ஆனால், வியாபாரியோ வழித்துணைக்குதானே இவர்களை அழைத்துச் செல்கிறேன். எடுபடி வேலை செய்யணும். இதனால் எனக்கு ஒரு பாதிப்பும் வராது என்று நினைத்தான்.
சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது.
"நம் முதலாளி பெட்டிகளை நனையாமல் பார்த்துக் கொள்ளச் சொன்னார். இப்பொழுது என்ன செய்வது?'' என்று கேட்டான் ஒருவன்.
"பெட்டிகளுக்கு உள்ளே இருக்கின்ற துணிகளை எல்லாம் எடுத்துப் பெட்டிகள் மேலே போட்டு மூடுவோம். பெட்டிகள் நனையாமல் பார்த்துக் கொள்வோம்,'' என்றான் அடுத்தவன்.
இருவரும் பெட்டிகளுக்குள் இருந்த விலையுயர்ந்த துணிகளை எல்லாம் எடுத்துப் பெட்டிகளுக்கு மேல் போட்டனர்.
மழையில் நனைந்து துணிகள் எல்லாம் ஈரமாகிவிட்டன.
ஒட்டகத்துடன் திரும்பிய வணிகன், ""ஐயோ! என்னடா செய்தீர்கள்? துணிகள் எல்லாம் நனைந்து வீணாகிவிட்டதே,'' என்று கோபத்துடன் கத்தினான்.
"முதலாளி நீங்க சொன்னபடி பெட்டிகள் நனையாமல் இருப்பதற்காகத் துணிகளை எல்லாம் அதன் மேலே போட்டோம். அந்தப் பெட்டிகள் சிறிது கூட நனையவில்லை. நீங்களே பாருங்கள்,'' என்றான் அவர்களில் ஒருவன்.
"முட்டாள்களான உங்களுக்கு இனி என்னிடம் வேலை இல்லை,'' என்று அவர்களை விரட்டினான் வணிகன்.
கொஞ்சம் காசுக்கு சிக்கனம் பார்க்கப் போய் முதலுக்கே நஷ்டம் வந்ததை எண்ணி வேதனையுடன் ஊர் திரும்பினான் வணிகன்.
============================================
Tiger in the toilet
காட்டுக்குள் இருந்து வழி தவறி வந்த அந்தப் புலி, எப்படியோ அந்த பன்னாட்டு நிறுவனத்தின் ரெஸ்ட் ரூமுக்குள் நுழைந்துவிட்டது.
ஆளரவத்தில் அரண்டு மிரண்டுபோன புலி, அந்த டாய்லெட்டின் ஓர் இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது.
மூன்று நாட்கள் மூச்சு காட்டாமல் இருந்த புலிக்கு, பசி வயிற்றைக் கிள்ளியது.
நாலாவது நாள்... பசி தாங்க முடியாமல் ரெஸ்ட் ரூமுக்குள் தனியாக வந்த ஓர் ஆளை அடித்துச் சாப்பிட்டது.
அவர், அந்த நிறுவனத்தின் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர். அவர் 'மிஸ்’ ஆனதைப்பற்றி அலுவலகத் தில் யாருக்கும் கவலை இல்லாததால், எந்த அதிர்வு நிகழ்வும் இல்லை.
பயப்படும் படி எதுவும் நிகழவில்லை என்பதால் இரண்டு நாட்கள் கழித்து, இன்னும் ஒரு நபரை அடித்துச் சாப்பிட்டது புலி.
அவர், அந்த நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர். யாரும் அவரைத் தேடவும் இல்லை, காணவில்லையே என்று பதறவும் இல்லை. (சொல்லப்போனால் அவர் அலுவலகத்தில் இல்லையே என்று சந்தோஷப்பட்டவர்கள்தான் அதிகம்!)
அடுத்த நாள், நிறுவனத்தின் வைஸ் பிரசிடென்ட்டை ஏப்பம்விட்டார் புலியார். நிறுவனத்தில் குண்டூசி விழுந்த சலனம்கூட இல்லை.
இதனால் குளிர்விட்டுப்போன புலி, நாம் வசிக்க ஏற்ற இடம் இதுதான் என்று தீர்மானித்து செட்டில் ஆனது.
அடுத்த நாள் பசிக்கவே இல்லாவிட்டாலும், சும்மா இருக்கட்டுமே என்று ஒரு நபரை அடித்து மூர்ச்சையாக்கி, தனக்குப் பக்கத்தில் இருத்திக்கொண்டது.
காபி கோப்பைகளைக் கழுவ வந்த அந்த நபர்தான் அலுவலகத்தின் பியூன்.
காபி வாங்கச் சென்ற பியூனைக் காணவில்லை என்று மொத்த அலுவலக மும் திமிலோகப்பட்டு, தேடுதல் வேட்டையைத் துவங்கியது.
அடுத்த பத்தாவது நிமிடத்தில், ரெஸ்ட் ரூமில் மூர்ச்சையாகிக்கிடந்த பியூனையும், தொடர்ந்து புலியையும் கண்டுபிடித்துவிட்டார்கள்.
புலியை அடித்துத் துவைத்து, கூண்டுக்குள் அடைத்து ஜூவுக்கு அனுப்பிவைத்தார்கள்!
நீதி உங்களுக்கான நட்பு அல்லது மரியாதையை நிர்ணயிப்பது உங்கள் பதவியோ, செல்வமோ கிடையாது. நீங்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது!
=====================================================